டெல்லி : மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,”மணிப்பூரில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. மணிப்பூரில் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூரில் தங்கி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்தார்,”இவ்வாறு தெரிவித்தார்.