சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகே.எஸ்.இளங்கோவன் சட்டமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜவின் பத்தாண்டு ஆட்சி எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். மிகவும் மோசமானது. பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் கொண்டுவந்த நீட் தேர்வு ரத்து குறித்த தனி தீர்மானம் தவறானது, ஒருபோதும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என பாஜ சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ‘‘பாஜ கூட்டணியில் இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சியே நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானத்தை வரவேற்று இருக்கிறார் கள்’’ என்றார்.