மோடி, ஆதித்யநாத்தை கொலை செய்வதாக மிரட்டல்: வாலிபர் மீது மும்பை போலீஸ் வழக்கு

மும்பை: மும்பை போலீஸ் மெயின் கன்ட்ரோல் ரூமுக்கு நேற்று முன் தினம் ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர் தான் மும்பை தாதா தாவூத் இப்ராஹீம் கையாள் என்றும், பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ஆகியோரை கொலை செய்ய உள்ளதாகவும் மிரட்டல் விடுத்தார். அதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் அந்த போன் கால் மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையிலிருந்து வந்ததை கண்டறிந்தனர். ஏற்கெனவே அந்த எண்ணிலிருந்து ஆதித்யநாத்துக்கு புரளியான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, அந்த நபர் கைது செய்து விசாரிக்கப்பட்டவர் என்று போலீசுக்கு தெரிய வந்தது. அவர், ஜே.ஜே. மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நீண்ட கியூவில் நின்ற நிலையில் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றாலும் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Related posts

“நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி.! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு