இந்த முழக்கம் தீவிரமானதால், இந்திய அரசியலமைப்பை மாற்றுவார்களா?, இட ஒதுக்கீடு ரத்து செய்வார்களா? என்ற அச்சம் மக்களிடையே எழத் தொடங்கியது. ஆனால், முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு இந்த முழக்கம் மீதான விவாதம் நிறுத்தப்பட்டது. 400-ஐ தாண்டும் என்ற முழக்கத்தை வைத்து எதிர்க்கட்சிகள் உருவாக்கிய பொய்யான கதையின் மூலமாக சில இடங்களில் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
மகாராஷ்டிராவிலும் அதன் சேதத்தை சந்திக்க நேரிட்டது’ என்றார். மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 7 இடங்களில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், 9 இடங்களில் பாஜகவும், ஒரு இடத்தில் மட்டும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசும் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் 13 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.