அதேநேரத்தில், தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை சில இடங்களில் இயல்பைஒட்டியும், சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவும் வெப்பநிலை இருந்தது. அதன்படி மதுரை விமான நிலையத்தில் அ திகபட்சமாக 103 டிகிரி வெயில் கொளுத்தியது. நாகப்பட்டினம் 101 டிகிரி, பெரும்பாலான இடங்களில் 100டிகிரிக்கும் குறைவாகவே வெயில் இருந்தது.
இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும் பொதுவாக மேககூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100டிகிரிக்கும் குறைவாகவே இருக்கும்.
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் 11ம் தேதி வரை வீசும். மேலும், தென் மேற்கு, ெதன் கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய வட மேற்கு வங்கக் கடலின் தெற்குப் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும் 10ம் தேதி வரை வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.