இந்த பேரணியில், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை பயன்படுத்தினால் உடலுக்குள் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை சைக்கிளில் ஏந்தியபடி சென்றனர்.
இதில் எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன், வியாசர்பாடி போக்குவரத்து எஸ்ஐ மனோகர் கலந்து கொண்டனர். புளியந்தோப்பு சரகத்துக்கு உட்பட்ட ஓட்டேரி, புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ் ஆகிய காவல் நிலையங்கள் சேர்ந்து போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். குக்ஸ் ரோடு அரசு பள்ளி மற்றும் இரண்டு தனியார் பள்ளிகள் இணைந்து நடத்திய இதில் 150 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ஆபிரகாம் குரூஸ், சிவகுமார், புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.