மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: முதல்வர் சோரம் தங்கா நம்பிக்கை

அய்ஸ்வால்: மிசோரமில் மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வர் சோரம் தங்கா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மிசோரமில் சோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணியின் பதவிக் காலம் டிசம்பர் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சோரம் தங்கா, “நடைபெறவுள்ள பேரவை தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். 35 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்.

காங்கிரஸ் கட்சி 1 அல்லது 2 இரண்டு இடங்களில் வெற்றி பெற்றால் அதுவே அவர்களுக்கு அதிர்ஷ்டம். அல்லது அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைய வாய்ப்புள்ளது. பாஜவின் நிலையும் இதேதான். ஜோரம் மக்கள் கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தாலே பெரிய விஷயம். மீண்டும் ஆட்சி அமைக்க மிசோ தேசிய முன்னணிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்று இவ்வாறு தெரிவித்தார்.

 

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது