இதற்காக வடக்கு வாசல் அருகே பக்தர்கள் வெளியே வரும் பாதையில் இருந்து கிழக்கு பிரகாரத்திற்கு செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக திருச்செந்தூர் கோயிலில் சண்முக விலாசம் பகுதியாக உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் வெளியேறிய பிறகு பிரகாரத்தை சுற்றி கடற்கரையை பார்த்துவிட்டு திரும்பிச் செல்வது வழக்கம். ஆனால் தற்போது வடக்கு வாசல் வழியாக வெளியேறும் பக்தர்களை அங்கு பணியில் ஈடுபட்டுள்ள செக்யூரிட்டிகள் எதிர் திசையில் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பக்தர்கள் கோயில் கிரிபிரகாரம் சுற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணிகள் விரைந்து முடிந்து பிரகாரம் சுற்றி வருவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.