‘மிஸ்டு கால்’ பிரச்சாரம் ராஜஸ்தான் காங்.தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் நவ.25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தால், காங்கிரஸ் அளித்த 7 உத்தரவாதங்களின் பலன்களைப் பெற, மொபைல் எண்ணில் மிஸ்டு கால்களை வழங்குமாறு காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ புகார் அளித்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்குள் பதிலளிக்குமாறு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் நாளிதழ்களில் அரசியல் விளம்பரங்களை செய்திகளாக மறைத்து வெளியிட்டதாக கூறி பா.ஜ அளித்த புகாருக்கு இன்று மாலை 3 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ராவுக்கு தேர்தல் ஆணையம் 2வது நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி