மின்சார ரயிலில் தவறவிட்ட தங்க பிரேஸ்லெட்: உரியவர்கள் பெற்றுக் கொள்ள ரயில்வே போலீசார் அறிவிப்பு

ஆவடி: மின்சார ரயிலில் தவறவிட்ட தங்க பிரேஸ்லெட்டை, உரிய ஆவணங்கள் காட்டி, உரியவர்கள் பெற்று கொள்ள ரயிவே இருப்புப் பாதை போலீசார் அறிவித்துள்ளனர். சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, 6 கிராம் கொண்ட ஒரு தங்க பிரேஸ்லெட் பொதுமக்கள் ஆவடி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்னர்.

தீவிர விசாரணைக்கு பிறகும், அதை யார் ரயிலில் தவற விட்டது என போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அந்த நகையை, ஆவடி ரயில்வே இருப்புப் பாதை போலீசார் பாதுகாப்பாக வைத்துள்ளனர். எனவே, நகையை தொலைத்தவர்கள், உரிய ஆவணங்களுடன், வந்து பெற்று செல்லுமாறு, ரயில் போலீசார் அறிவித்துள்ளனர். இதற்காக, 94981 80938 என்ற மொபைல் எண்ணையும் போலீசார் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Related posts

ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு