அப்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார். அதனை தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சுண்ணாம்பு கொளத்தூர் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சீரமைப்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.