இது தொடர்பாக பேசிய அவர், “தமிழ்நாட்டில் கோவில்கள் அரசின் கைகளில் உள்ளன. கோவில்களின் சொத்துகளை அரசு தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.கோவில்களின் சொத்துக்கள் அரசின் துணையுடன் அபகரிக்கப்படுகின்றன.சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்களை அவர்கள் தொடுவதில்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்வதில்லை,”என்றார். I.N.D.I.A. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்து கோவில்கள் நிர்வாகத்தில் இருந்து விலகுமாறு தமிழ்நாடு அரசை கூற முடியுமா என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். மக்கள் தொகைக்கு ஏற்பட உரிமை தர வேண்டும் என்று கூறும் காங்கிரஸ், கோவில்களை இந்துக்களிடம் அளித்து அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுமா என்றும் மோடி கேட்டார்.