சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நலனை காக்க அரசு முக்கிய பங்காற்றி வருகிறது. கலைஞர் ஆட்சி காலம் முதல் சிறுபான்மையினருக்கு பல நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.