தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் என்று பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றவர் கலைஞர். கலைஞர், பேருந்தை நாட்டுடமை ஆக்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதியை செய்து கொடுத்திருக்கிறார். ஒரு கோடியே 14 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கி, மகளிர் பொருளாதார உரிமையை நிலைநாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை முறைப்படுத்தி தந்த நிறுவனங்களின் நாயகர் கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசு சிறப்போடு செயல்பட்டு வருகிறது என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை பார்வையிட்டார்.