நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் அறிவித்த அறிவிப்புகளில் ஒன்றான தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் 60,587 நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இன்று கோடம்பாக்கம் மண்டலம், அண்ணா பிரதான சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். மேயர் பிரியா, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை