சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்.7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொளியில் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் 18ம் முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவிட்டார்.