டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை தொடர்ந்து நாளையும் விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். உடல்நிலையை கருத்தில் கொண்டு தினமும் சில மணிநேரம் மட்டும் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என செந்தில்பாலாஜி தரப்பு வாதம் செய்தது. செந்தில்பாலாஜி சிறிது, சிறிதாக குணமடைந்து வருகிறார், சிறை மருத்துவமனையில்தான் உள்ளார் எனவும் மனுதாரர் தெரிவித்தார்.