Saturday, September 28, 2024
Home » இஎஸ்ஐ மருத்துவமனையின் மருத்துவர்கள் 4 பேர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை; செந்தில் பாலாஜியின் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்..!!

இஎஸ்ஐ மருத்துவமனையின் மருத்துவர்கள் 4 பேர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை; செந்தில் பாலாஜியின் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிந்துரை செய்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்திய நிலையில், இன்று நள்ளிரவில் கைது செய்திருக்கிறது. இதனிடையே நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடைபெற்றது.

இதுகுறித்து ஓமந்தூரார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.செந்தில்பாலாஜி, வயது 47, அவர்களுக்கு இருதய இரத்த நாள பரிசோதனை காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்றே பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.

ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிந்துரை செய்துள்ளனர். இதனிடையே ஒன்றிய சுகாதாரத்துறையின் கீழ் உள்ள இஎஸ்ஐ மருத்துவர்கள் செந்தில் பாலாஜி உடலை பரிசோதிக்க ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சைகள் குறித்து இஎஸ்ஐ மருத்துவர்கள் கேட்டறிந்தனர்.

மருத்துவர்கள் தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் இஎஸ்ஐ மருத்துவர்கள் குழு ஆலோசனை நடத்தவுள்ளது. செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சிகிச்சை மேற்கொள்வது குறித்து சில ஆலோசனைகளை இஎஸ்ஐ மருத்துவர்கள் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இஎஸ்ஐ மருத்துவமனையின் முதல்வர் அறிக்கையினை அமலாக்கத் துறையினரிடம் அளிப்பார். அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

You may also like

Leave a Comment

15 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi