சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் நவம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவுஅளித்துள்ளார். புழல் சிறையில் இருந்து காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவல் 9ஆவது முறையாக நீட்டித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளார்.