பின்னர் இரு தரப்பினரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். இதுகுறித்து கொல்வலே காவல் நிலையத்தில் அமைச்சர் தரப்பிலும், நடிகர் தரப்பிலும் தனித்தனியாக புகார்கள் அளிக்கப்பட்டன. இவ்விவகாரம் ெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கவுரவ் பக்ஷி கூறுகையில், ‘எனது காரில் இருந்து இறங்கிச் சென்று, அமைச்சரின் காரை கொஞ்சம் நகர்த்துமாறு டிரைவரிடம் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். மாறாக அமைச்சரின் காருக்குள் இருந்த பிஎஸ்ஓ, எனது காரை அங்கிருந்து நகர்த்தாவிட்டால் என்னை அடிப்பேன் என்று கூறினார். ஒருகட்டத்தில் தனது துப்பாக்கியை எடுத்து காட்டி அச்சுறுத்தினார். அதனால் நான் எனது செல்போன் மூலம் மிரட்டுவதை வீடியோ எடுத்தேன். அதனையும் போலீசில் ஒப்படைப்பேன்’ என்றார். அமைச்சரின் பிஎஸ்ஓவுக்கும், நடிகருக்கும் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.