அமைச்சர் பொன்முடி வீட்டில் 6 மணி நேரமாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை..!!

சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் 6 மணி நேரமாக அமலாக்கத்துறையின் சோதனை தொடர்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் சைதாப்பேட்டை, எழும்பூர், பெசன்ட் நகர் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவ போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். விக்கிரவாண்டியில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சூர்யா பொறியியல் கல்வி என 2 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி எம்.பி. வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related posts

உடுமலை அருகே தளி பகுதியில் ரூ.72 கோடி மதிப்பில் காண்டூர் சம மட்ட கால்வாய் சீரமைப்பு பணிகள் மும்முரம்

நெல்லை சந்திப்பில் வளையதரசுற்று உயரம் அதிகரிப்பு

வழக்கறிஞரை அதிகமுறை சந்திக்க அனுமதி கோரிய கெஜ்ரிவால் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு