Thursday, September 12, 2024
Home » 2024-25ம் ஆண்டுகான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

2024-25ம் ஆண்டுகான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

by Francis

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆக.21-ம் தேதி தொடங்குகிறது. (MBBS), (BDS), மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 2024-25ம் ஆண்டுகான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

பின்னர் பேசிய அமைச்சர் கூறியதாவது; இவ்வாண்டு மருத்துவ படிப்புக்கு 43,063 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 2,721 அதிகம். அரசு ஒதுக்கீட்டின் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 495 எம்பிபிஎஸ் இடங்களும் 125 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் நாமக்கல் மாணவர் ரஜினீஷ் முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை சென்னை மாணவர் சையது யூசுப், 3-வது இடத்தை சென்னை மாணவி சைலஜா பிடித்தனர்.

4-வது இடத்தை ஸ்ரீராமும், 5-வது இடத்தை ஜெயதி பூர்வஜா பிடித்தனர். தரவரிசை பட்டியலில் 6-வது இடத்தை நாமக்கல் மாணவர் ரோகித்தும் 7-வது இடத்தை சபரீசனும் பிடித்துள்ளனர். மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசை பட்டியலில் மாணவி ரூபிகா முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை சென்னை தைசாப்பேட்டை பள்ளி காயத்ரி தேவியும், 3-வது இடத்தை தண்டராம்பட்டு மாணவி அனுஷியாவும் பிடித்தனர்.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசை பட்டியலில் 669 மதிப்பெண் பெற்ற மாணவி ரூபிகா முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை 668 மதிப்பெண் பெற்ற சென்னை தைசாப்பேட்டை அரசு பயிற்சி மையத்தில் படித்த காயத்ரி தேவி பிடித்துள்ளார். 665 மதிப்பெண் பெற்ற தண்டராம்பட்டு மாணவி அனுஷியா 3-வது இடத்தை பிடித்தார். 665 மதிப்பெண் பெற்ற நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் ரத்தீஷ் 4-வது இடம், திருவண்ணாமலை கலசப்பாக்கத்தைச் சேர்ந்த அன்பரசன் 5-வது இடம் பிடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

 

You may also like

Leave a Comment

2 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi