இன்றைக்கு 99.9 சதவீதம் மருத்துவமனைகளிலேயே பிரசவங்கள் நடக்கிறது. இதில் அரசு மருத்துவமனைகளில் 59 சதவீதம் பிரசவங்கள் நடக்கிறது. கர்ப்பகால சிக்கல்கள் உள்ள தாய்மார்களை கண்டறிந்து நல்ல முறையில் சிகிச்சை வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு என்கின்ற வகையில் விருது ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் மகப்பேறு பராமரிப்பு மையங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2ம் இடம் பிடித்திருக்கிறது என்று சொல்லி இந்தியாவில் 2ம் பரிசு கடந்த ஆண்டு தரப்பட்டது. ரத்த சோகையை தடுப்பதற்காக தகவல் கல்வி மற்றும் தகவல் தொடர்புகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு மருத்துவத்துறைக்கு ஒன்றிய அரசின் முதல் பரிசு கிடைத்துள்ளது.
இதுவரை விருதுநகர் மாவட்டம் மகப்பேறு இறப்பு “பூஜ்ஜியம்” என்கின்ற அளவில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற மாவட்ட சுகாதார அலுவலர்களும் இதனைப் பின்பற்றி மகப்பேறு இறப்பு “பூஜ்ஜியம்” என்கின்ற அளவில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்பட பலர் பங்கேற்றனர்.