20 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். தமிழ்நாடு அரசு  பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் பயிற்சி பிரிவில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 18 விடுதி கண்காணிப்பாளர்.

உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கு மற்றும் கருணை அடிப்படையில் இருவர் என மொத்தம் 20 பேருக்கு பணி நியமன ஆணைகளை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் குமார் ஜயந்த், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் சுந்தரவல்லி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்