அமைச்சருக்கு மிரட்டல் விடுத்து பேசியவர் கைது

சோளிங்கர்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் கடந்த 19ம் தேதி தலித் கூட்டமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்த இந்திய குடியரசு கட்சி நிர்வாகி இளையராஜா(40) அமைச்சர் துரைமுருகன் குறித்து தகாத வார்த்தைகளாலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியுள்ளார். இது குறித்து சோளிங்கர் போலீசில் விஏஓ சங்கரநாராயணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் மாலை கொடைக்கல் பஸ் நிறுத்தம் அருகே பதுங்கியிருந்த இளையராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை