சென்னை: ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு உண்மைக்கு மாறான தகவலை கூறி அரசியலில் ஈடுபடக் கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்தார். ஆளுநர் அரசியல் செய்வதாக இருந்தால் அதற்கு ராஜ்பவனை பயன்படுத்தக் கூடாது. கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை ஆளுநர் முற்றிலும் அறியவில்லையோ? அல்லது அறிந்தும் அறியாமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை எனவும் கூறினார்.