சென்னை : சென்னையில் நேற்று ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். அதில்,”சென்னை மணலி துணை மின் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து காரணமாக மாநகரின் சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மின்வாரியத்தின் துரித நடவடிக்கை காரணமாக இரவு 2 மணிக்கு 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.