இந்த நிலையில் மனநலம் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 50 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை இன்று காலை அமைச்சர் மா.சுப்ரமணியன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுக்கோட்டை அருகே மனநலம் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 50 பேர் பாதுகாப்பாக உள்ளனர். மனநல காப்பகத்தில் மனிதாபிமானமற்ற முறையில் 50 பெண்கள் நடத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி தொடங்கும்.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும்,”எனத் தெரிவித்தார்.