சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபுவின் அண்ணன் மகன் லோகேஷ்குமார்-ரித்திகா திருமணம் கடந்த 16ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆழ்வார்ப்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடந்தது.
இதை தொடர்ந்து, இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, ரகுபதி, மூர்த்தி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், மா.சுப்பிரமணியன், பெரியகருப்பன், காந்தி, மனோ தங்கராஜ், சாமிநாதன், ராஜகண்ணப்பன், கீதா ஜீவன், எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன்,
எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், ெவற்றி அழகன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்ெசயலாளர் வைகோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கநாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன், மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.