சென்னை; அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலமாக புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.