சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது. 14 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.