சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான் என மூன்றாவது நீதிபதி சி.வி.கார்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்தத் தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால் காவலில் எடுக்கவேண்டியது அவசியம். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நீருபிக்கட்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி என கூறினார்.