அவர்கள் செல்லுவதற்கு தேவையான வசதிகளை செய்து தர அறநிலையத்துறை தயாராக உள்ளது,”என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்டியதில் எந்த தவறும் இல்லை. தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழர்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் பெயர் சூட்டப்பட்டது சாலப் பொருத்தமானது. அனைத்து தலைவர்களுக்கும் புகழ் சேர்கின்ற ஆட்சி நமது திமுக ஆட்சி. நாவலருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடியது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி. ஆகவே இன்னார் இனியவர் என்று இல்ல. தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் உழைத்த தலைவர்களை பெருமை சேர்ப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, “இவ்வாறு தெரிவித்துள்ளார்.