சென்னை : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, “திருவட்டாரில் குற்றவியல், உரிமையியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சரிடம் உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.