சென்னை :எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,”தவறான தகவல்கள், தேவையற்ற கண்டனங்களை தெரிவிப்பதை பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் அவசர கதியில் வழக்கம்போல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் எடப்பாடி. விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்ததாக கூறுவது தவறானது,”இவ்வாறு தெரிவித்தார்.