சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் ரூ. 81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 13 லட்சம் மதிப்புள்ள பிரிட்டிஷ் பவுண்டுகளும் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணிக்கு தொடர்புடைய 7 இடங்களில் திங்கட்கிழமை சோதனை மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர்.