மாநிலம் முழுவதும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் : அமைச்சர் முத்துசாமி

சென்னை : மாநிலம் முழுவதும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் , “ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் கால்வாய் ரூ.21 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சியில் 12 ஓடைகளில் 30 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மக்களுக்கு உள்ள பிரச்சனையை தீர்க்க 16 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

உணவுக்காக யானைகளை கொலை செய்ய ஜிம்பாப்வே அரசு திட்டம்!!

தி.மலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்: ரஷ்யா அதிபர் புதின் வலியுறுத்தல்