8 வீடுகள் கொண்ட 3 மாடி குடியிருப்பு கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு : அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னை : தமிழ்நாட்டில், 8 வீடுகள் கொண்ட 3 மாடி குடியிருப்பு  கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில்,”பொதுகட்டட விதிகளின்படி, 8,000 சதுர அடி அல்லது, 3 வீடுகளுக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்ற நிலை தற்போது உள்ளது. இதை, 8 வீடுகள் என்று மாற்றுவதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்