சென்னை: பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்து கருத்துக்கேட்பு ஆலோசனை கூட்டம் ஜூலை 27ம் தேதி நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை சார்பில் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளனர். கட்டடம், மனை விற்கும் தொழில்புரியும் அனைத்து கூட்டமைப்புகள், நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.