Wednesday, July 3, 2024
Home » இந்திய நாடார்கள் பேரமைப்பின் முப்பெரும் விழா நாடார் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு விருது: அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்

இந்திய நாடார்கள் பேரமைப்பின் முப்பெரும் விழா நாடார் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு விருது: அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்

by Dhanush Kumar

சென்னை: பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா, இந்திய நாடார்கள் பேரமைப்பின் துவக்க விழா மற்றும் நாடார் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு விருது என்ற முப்பெரும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நாடார் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு விருதுகள் மற்றும் 230 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இவ்விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனுக்கு பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியன் நாடார் விருது, நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல்ராஜுக்கு தியாகி பெ.சங்கரலிங்க நாடார் விருது, திருநெல்வேலி தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் காளிதாசுக்கு குமரி தந்தை மார்ஷல் நேசமணி விருது, நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் போரூர் ஆனந்தராஜுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது, சென்னைவாழ் நாடார் நலச்சங்கத் தலைவர் சின்னமணி நாடாருக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருது, விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி தரும பண்டு சென்னை தலைவர் சந்திரமோகனுக்கு ம.பொ.சி. விருது, கோவை நாடார் சங்கத் தலைவர் பாஸ்கரனுக்கு செ.அரங்கநாயகம் விருது வழங்கப்பட்டது.

இதில் ம.பொ.சி. மாதவி பாஸ்கரன், சந்திரன் ஜெயபால், மின்னல் ஸ்டீபன், கார்த்திகேயன், ஏ.டி.சுப்பையா, இ.எம்.சீனிவாசன், பொன்.விஸ்வநாதன், எஸ்.வி.பூமிநாதன், தமயந்தி பன்னீர்செல்வம், சி.ராஜேந்திரன், ஏ.வி.ஏ.ராஜ்குமார், எஸ்எஸ்எஸ்யு.சந்திரன், எஸ்.என்.முருகேஷ், ஆர்.மாதவன், இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில பொருளாளர் ஏ.எம்.டி.ஷிவகுமார், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆ.பாலாஜி, இளைஞரணி தலைவர் பிரபா சுரேஷ்கிருஷ்ணன், அயன்புரம் நாடார் சங்கம் எம்.வளராஜ், மாதவரம் நாடார் சங்கத் தலைவர் ஏ.பொன்கண்ணன்ராம், கொளத்தூர் எம்.பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

You may also like

Leave a Comment

12 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi