பின்னர், அமைச்சர் தி.நகர் மண்டல அலுவலக வாயிலில் உள்ள ஆவின் விற்பனை நிலையத்தை ஆய்வு செய்தார். அங்கு வந்த வாடிக்கையாளர்களிடம் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் குறித்த கருத்தை கேட்டறிந்தார். தி.நகர் மண்டல அலுவலகத்தை ஆய்வு செய்து, அங்கு மாதாந்திர பால் அட்டை விற்பனை குறித்து விரிவாக ஆய்வு நடத்தி, நுகர்வோர்களிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பால் அட்டை புதுப்பித்தல் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் சலுகை சரியான நுகர்வோர்களுக்கு சென்றடைகிறதா என்பதை உறுதி செய்தார். பின்னர், அமைச்சர் தி.நகர் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் சென்று மாதாந்திர பால் அட்டை விற்பனை மற்றும் அதற்கு பெறப்படும் அடையாள அட்டை நகல்களை ஆய்வு செய்தார். தி.நகர் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் மூலம் மாதாந்திர பால் அட்டைகள் விற்பனை மற்றும் அதன் பயனாளர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த மாதாந்திர பால் அட்டை நடைமுறையை எளிமைப்படுத்துவதற்கும், இணைய வழியாக பால் அட்டை விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.