இதனையடுத்து, ஆயுர்வேத தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆயுஷ் பட்டய படிப்பு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்தநிகழ்வின் போது, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் மைதிலி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் ராமலிங்கம், மாமன்ற உறுப்பினர் ராணி, இணை இயக்குநர் பார்த்திபன், மணவாளன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.