சென்னை : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. வழக்கின் விசாரணையில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்.