உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி அமைச்சர் அன்பில் மகேஷிடம் முதல்வர் நலம் விசாரிப்பு

சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாக உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தருமபுரி வழியாக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரிமங்கலம் அருகே சென்ற போது அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் அன்பில் மகேஷை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நலம் சீரடைந்த நிலையில் நேற்று அவர் சென்னை திரும்பினார்.

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!