அமைச்சர் அமித் ஷாவின் இத்தகைய பேச்சு சர்வாதிகார போக்கை காட்டுவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அமிர்தசரசில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், “அமித் ஷாவின் அறிக்கையை கேட்டீர்களா? அவர் மிரட்டல் விடுக்கிறார். முதலில் அவர் பஞ்சாப் மக்களை மிகவும் அவமதித்துவிட்டார். ஜூன் 4ம் தேதிக்கு பின் பஞ்சாப் அரசு கவிழ்ந்துவிடும் என்று மிரட்டுகிறார். பக்வந்த் மான் முதல்வராக இருக்கமாட்டார் என்கிறார். எங்களிடம் 92 எம்எல்ஏக்கள் உள்ளனர். நீங்கள் எப்படி அரசை கவிழ்ப்பீர்கள்?. நாட்டில் சர்வாதிகாரம் உள்ளது” என்றார்.