அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் உடல்நிலை பாதிக்கபட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, அங்கிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜார்படுத்தபட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை டிசம்பர் 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது, அமலாக்கதுறை எடுத்துச் சென்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை அமலாக்கதுறை வசம் உள்ளதாகவும் அந்த ஆவணங்களை தங்களிடம் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கடந்த விசாரணையின்போது மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவிற்கு அமலாக்க துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கிற்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வழங்கபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆவணங்களை கோரிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.