சென்னை: அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய நடத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள் ஹென்றி திபேன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன், வழக்கறிஞர் அஜிதா, தராசு ஷ்யாம், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 13 மணி நேர விசாரணைக்குப் பிறகு நள்ளிரவில் அழைத்து சென்றது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.