டெல்லி: மாநிலங்களில் உள்ள கனிம வளத்துக்காக ஒன்றிய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சுரங்கங்கள், தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட விதிகளில் மாநில உரிமைகளைக் கட்டுப்படுத்தும் பிரிவுகள் எதுவும் இல்லை. கனிம வளங்கள் மீது வரிவிதிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே உள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.