சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆவின் நிர்வாகம் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் பால் கொள்முதலில் புதிய இலக்கை எட்டவுள்ளோம். ஆவின் பொருட்களை கூட்டுறவு துறையுடன் இணைந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.