சென்னை :ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பால் கனகராஜிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. வடசென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் பால் கனகராஜ். ரவுடி நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக பால் கனகராஜ் பணியாற்றியதால் அவர் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.